
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் ஜூன் மாதப் பருவத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமானது 2002 ஆம் ஆண்டு ‘எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் கல்வி’ என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் எனப்படும் பருவத் தேர்வுகள், ஜூன் மாதத்தில் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டன. அதில், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு தேர்வை எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை https://exam.tnouniv.com/result21/ என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் . மறு மதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கான விவரங்களும் அதே இணையதளத்தில் இடம் பெற்றுள்ளன. மேலும் விவரங்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
மதிப்பெண் சான்றிதழ்கள் விரைவில் மாணவர்களுக்கு அனுப்பப்படும் என்று தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.