
தமிழ்நாட்டு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு B.Ed பட்டப்படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்விக்குழுமம்(N.C.T.E) மற்றும் யு.ஜி.சி(U.G.C) அனுமதி அளித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டிற்கான (2020 -2021)சேர்க்கையானது பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் நடைபெறும் எனவும் ,மேலும் வகுப்புகள் மே மாதம் தொடங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்புக்கு ,தமிழ் வழியில் 500 மாணவர்களும் ,ஆங்கில வழியில் 500 மாணவர்களும் என மொத்தம் 1000 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது .மேலும் விவரங்களை பெற பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnou.ac.in -ஐ அணுகவும் .