பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடக்கம்..

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.தற்போது சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில் , 89 ஆயிரத்து 187 இடங்கள் நிரம்பி இருந்தன. இதையடுத்து மீதம் உள்ள இடங்களை நிரப்புவதற்கு துணை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் 20-ந்தேதி (நேற்று) முதல் கலந்தாய்வு தொடங்கும் என்று அறிவித்திருந்தநிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், பொறியியல் படிப்புக்கான துணை கலந்தாய்வு தரவரிசை பட்டியல் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுவதோடு, கலந்தாய்வும் இன்றே தொடங்க இருக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு மாணவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (சனிக்கிழமை) தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். அதனை அன்றைய தினமே உறுதி செய்வதற்கும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இறுதியாக 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) இறுதி ஒதுக்கீட்டு ஆணையுடன் துணை கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.

Next Post

10, 12-ம் வகுப்பு தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு மைய நகரத்தை மாற்றிக்கொள்ள வாய்ப்பு - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு..

Thu Oct 21 , 2021
சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்றை கருத்தில் கொண்டு கல்வி அமர்வை இரண்டாக பிரிப்பது, 2 பருவங்களாக பொதுத்தேர்வை நடத்த சி.பி.எஸ்.இ. திட்டமிட்டிருந்தது. இதன்படி, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவ பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் சில மாணவர்கள் பள்ளி அமைந்திருக்கும் நகரத்தில் இருந்து வேறுநகரத்தில் வசிப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை […]
cbse-10th-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய