தடுப்பூசி போட்டால் மட்டுமே மாணவர்கள் கல்லூரிக்குள் அனுமதி..

கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகளில் நேரடியாக தடுப்பூசி போடும் திட்டத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று நந்தனம் கலைக் கல்லூரியில் திறந்து வைத்தார்.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் வருகிற செப்டம்பர் 1-ந்தேதி திறக்கப்படுவதால், ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கல்லூரிகளிலும் தடுப்பூசி போடும் முகாம் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது. 2 வாரத்தில் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும். கல்லூரிகளில் படிக்கும் 18 வயது பூர்த்தியான அனைத்து மாணவர்களும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டால் தான் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அனைத்து கல்லூரி நிர்வாகங்களும் மாணவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பள்ளி உயர்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Sat Aug 28 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 17,559 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34,856 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 21 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 230 பேருக்கும்,சென்னையில் 182 […]
district-wise-corona-updates-28-8-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய