
உருமாறிய கொரோனா வைரஸ் புதிதாக வியட்நாமில் கண்டறியப்பட்டுள்ளது. இது காற்றில் அதிவேகமாக பரவும் தன்மையைக் கொண்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் ஆனது சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.தற்போது இந்த வைரஸ் உருமாறி வருகிறது. தற்போது உருமாறிய வைரஸ் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் என பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வியட்நாம் நாட்டில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் மிக வீரியமிக்கது. இது காற்றிலும் பரவும் தன்மையைக் கொண்டுள்ளது என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து அந்நாட்டின் சுகாதார மந்திரி நகுயென் தன் லாங் கூறியதாவது,
புதிய உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்றை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.இந்த உருமாறிய வைரஸ் அதிக வீரியமிக்க வைரசாகும். இது இந்தியாவிலும், இங்கிலாந்திலும் முதலில் காணப்பட்ட உருமாறிய வைரஸ்களின் கலப்பினம் ஆகும்.
இந்த வைரசின் தனித்தன்மை என்னவென்றால், இது காற்றில் வேகமாக பரவக்கூடியதாகும். தொண்டை திரவத்தில் இந்த வைரசின் செறிவு வேகமாக அதிகரிக்கிறது,மேலும் சுற்றுச்சூழலிலும் வலுவாக பரவுகிறது என்று கூறியுள்ளனர்.