
விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சிரிஷா பண்டாலா தற்போது பெற்றுள்ளார்.
விண்வெளிக்கு ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா மற்றும் சுனிதா வில்லியம்ஸ் ஆகியோருக்குப் பிறகு பறக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்காவது நபராக சிரிஷா உள்ளார் ,இது இந்தியாவிற்கு பெரும் புகழையும் பெருமையையும் சேர்த்துள்ளது.
விர்ஜின் கேலடிக் என்பது ஒரு அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமாகும்.இந்நிறுவனத்தில் அரசு விவகாரங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளின் துணைத் தலைவராக சிரிஷா பண்ட்லா இருக்கிறார்.விர்ஜின் கேலடிக் நிறுவனம் சோதனை முயற்சியின் ஒரு பகுதியாக அடுத்த வார இறுதியில் தனது விண்கலமான ‘யூனிட்டி 22’ ஐ அறிமுகப்படுத்துகிறது.
விர்ஜின் கேலடிக் நிறுவனத்தின் தலைவரான ரிச்சர்ட் பிரான்சன் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு வரும் 11 ஆம் தேதி விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.இந்த பயணத்தில் சிரிஷா பண்ட்லா, பெத் மோசஸ் மற்றும் கொலின் பென்னட் ஆகியோருடன் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்பானா சாவ்லாவைத் தொடர்ந்து விண்வெளி பயணம் மேற்கொள்ளவுள்ள இரண்டாவது பெண் சிரிஷாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.