டோக்கியோ ஒலிம்பிக் போட்டி : இந்தியாவின் மல்யுத்த வீரர் ரவி தாஹியாவுக்கு வெள்ளி பதக்கம்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32வது ஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்போட்டியில் , ஆடவர் 57 கிலோ பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், ஆடவருக்கான மல்யுத்த பிரிவில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும், தீபக் புனியா 86 கிலோ ப்ரீஸ்டைல் எடைப்பிரிவிலும் அரையிறுதிக்கு முன்னேறினர்.

இந்நிலையில் தீபக்புனியா நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.மற்றொரு ஆடவர் பிரிவில் , 57 கிலோ எடைப்பிரிவு அரையிறுதி போட்டியில் கஜகஸ்தான் வீரரை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ரவிக்குமார் தாஹியா.

பின்னர், ரவிக்குமார் தாஹியா மற்றும் நடப்பு உலக சாம்பியன் ஜாவூர் உகுவேவ் (ரஷியா) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர்.இப்போட்டியின் இறுதியில் 4-7 என்ற புள்ளிக் கணக்கில் ரவிக்குமார் தோல்வியடைந்தார். இதனால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Next Post

தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு..

Thu Aug 5 , 2021
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தால் 03.01.2021 அன்று நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வில், தமிழ் வழியில் பயின்றுள்ளதாக தெரிவித்துள்ள விண்ணப்பதாரர்கள் மட்டும், தங்கள் தமிழ் வழியில் பயின்ற சான்றிதழ் பெறுவதற்கான படிவங்கள், தேர்வாணைய இணையதளத்தில் கீழ்க்காணும் தரவுகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. நியமனம் – அறிவிக்கை – விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள். படிவங்கள் மற்றும் பதிவிறக்கங்கள் – விண்ணப்பதாரர் தொடர்பான படிவங்கள் – தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ் படிவம். விண்ணப்பதாரர்கள் மேற்குறிப்பிட்ட படிவங்களை […]
Tamilnadu-public-service-commission-2021-1
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய