முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கு அடுத்த மாதம் 15 ஆம் தேதி செமஸ்டர் தேர்வுகள் தொடக்கம்

முதுநிலை என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் (ஏப்ரல்) 15 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.இதைப்போன்று, இணைப்பு கல்லூரிகளுக்கும் இதே தேதியில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், இளநிலை என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஏற்கனவே தேர்வுகள் தொடங்கி வருகிற 26 ஆம் தேதியுடன் தேர்வு முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டன.கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் திறக்கப்பட பள்ளி,கல்லூரிகள் மீண்டும் மூடப்பட்டது.இந்நிலையில்,கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகளை தொடர அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

மேலும்,என்ஜினீயரிங் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வருகிற 31 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.இவற்றில்,சில பாடப்பிரிவுகளை சேர்ந்த அரியர் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் புதிய ‘இருமுறை உருமாறிய கொரோனா’ கண்டுபிடிப்பு..

Thu Mar 25 , 2021
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில் புதிய ‘இருமுறை உருமாறிய கொரோனா’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்சாகாக் என்ற 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை உருவாகியுள்ளது .இந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வானது நடந்து வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து சுமார் 10,787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் இன்சாகாக் ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதில் […]
new-type-of-corona-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய