
பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கும் என அண்ணாப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.தற்போது கொரோன தொற்று குறைந்து வருவதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் ஆன்லைனில் இல்லாமல் நேரடியாக தேர்வு மையங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் பொறியியல் படிப்பிற்கான செமஸ்டர் தேர்வு துவங்கும் தேதியை அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது .
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் 13-ம் தேதி (டிசம்பர்) தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் இன்று அறிவித்துள்ளது. டிசம்பர் 13-ம் தேதி தொடங்க உள்ள தேர்வுக்கான விரிவான அட்டவணை விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு இன்டர்னல், வைவா, செமஸ்டர் என அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.