பொறியியல் மாணவர்களுக்கு நேரடி முறையில் செமஸ்டர் தேர்வு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு..

2021 -2022ம் கல்வியாண்டிற்கான பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது.கடந்த அக்டோபர் 17ம் தேதி வரை பொது மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் ,இரண்டாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என தனியார் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தனர்.

நடப்பு கல்வியாண்டில் நேரடி தேர்வுகள் தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், பி.ஆர்க் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் கல்லூரிகளுக்கு சென்று உங்கள் சேர்க்கையை உறுதிபடுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Next Post

மேல்நிலை வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு..

Mon Nov 15 , 2021
2014 மார்ச் முதல் 2018 செப்டம்பர் வரையிலான காலத்தில் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் பெறுவதற்கான வழிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கழிவுத்தாட்களாக மாற்றிடும் பொருட்டு அரசிதழில் அறிக்கை வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதிப்பெண் சான்றிதழ் பெறாத தனித் தேர்வர்கள் ,மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ள இதுவே இறுதி வாய்ப்பாகும் என்று கூறப்பட்டுள்ளது.இத்தருணத்தைப் பயன்படுத்தி ஒரு வெள்ளைத் தாளில் மதிப்பெண் […]
12th-individuals-marksheet
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய