
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தற்போது, உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.28 கோடியை தாண்டியுள்ளது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையை தொடங்கியது,தற்போது கொரோனா இந்தாண்டு மார்ச் மாதம் இரண்டாம் அலையை வீச தொடங்கியுள்ளது.
இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,15,55,284 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று பாதிப்பால் இந்தியாவில் ஒரே நாளில் 188 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,07,332 ஆக உள்ளது.நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,59,558 ஆகும் .
நாடு முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் கொரோனவுக்காக 2,88,394 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .மேலும் இதுவரை 4,20,63,392 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ICMR அறிக்கையின் படி,கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 23,24,31,517 பேருக்கு கொரோன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.