ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் இயங்கும் : பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ..

தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கத்தின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு ,பின்னர் படிப்படியாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் நடைப்பெற்று வந்தது.

தற்போது,அனைத்து பள்ளிகளும் மார்ச் மாதத்துடன் மூடப்படுவதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.இது முற்றிலும் தவறான தகவல் எனவும் ,ஏப்ரல் 1 முதல் வழக்கம் போல் பள்ளிகள் நடைபெறும் எனவும் பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார் .

கொரோனா பரவல் ஆனது தற்போது அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளிகளும் மார்ச் மாதத்துடன் மூடப்படும் என்ற தகவல் மாணவர்கள் மற்றும் மக்களிடையே பரவி வந்தது.இதனிடையே பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது ,இதில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பள்ளிகள் வழக்கம் போல் நடைபெறும் ,மேலும் மார்ச் மாதத்துடன் பள்ளிகள் மூடப்படும் என்ற செய்தி தவறானது என்ற விளக்கத்தையும் பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது .

Next Post

நாடு முழுவதும் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா பாதிப்பு : மத்திய சுகாதாரத்துறை..

Tue Mar 16 , 2021
இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 24,492 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது .தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 12.07 கோடியாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தாக்கமானது, குறிப்பாக மராட்டியம், கேரளா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத் மற்றும் தமிழகம் ஆகிய 6 மாநிலங்களில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. இன்று செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, இந்தியா நாடு முழுவதும் […]
covid19-increase-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய