விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய உலகின் முதல் நாடான ரஷியா

கொரோனா வைரஸானது உலகையே கடந்த ஓராண்டுக்கு மேலாக அச்சுறுத்தி வருகிறது.இந்த கொடிய வைரசை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் உலகின் பெரும்பாலான நாடுகள் தடுப்பூசி மருந்துகளை தங்களது மக்களுக்கு செலுத்தும் பணியில் தீவிரமாக உள்ளன.

இந்த கொடிய கொரோனா வைரஸானது மனிதர்கள் மட்டுமின்றி நாய், பூனை மற்றும் குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் விலங்குகளுக்கான உலகின் முதல் கொரோனா தடுப்பூசியை ரஷியா உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.இந்த தடுப்பூசிக்கு கார்னிவாக்-கோவ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரஷியா அதிகாரி வெளியிட்ட அறிக்கையில்,கார்னிவாக்-கோவ் தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு,நாய்கள், பூனைகள், ஆர்க்டிக் நரிகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டன.இந்த பரிசோதனையின் முடிவுகள் விலங்குகளுக்கு பாதிப்பில்லாதது எனவும்,மேலும் விலங்குகளுக்கு அதிக நோய் எதிர்ப்பு திறனை அளிக்கிறது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.

பல நாடுகளும் கார்னிவாக்-கோவ் தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.அமெரிக்கா, கனடா, போலாந்து, ஆஸ்திரேலியா, கிரீஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் விலங்குகளுக்கான தடுப்பூசியை வாங்குவதில் ஆர்வம் கட்டி வருகிறது.

Next Post

இந்தியாவில் அதிவேகத்தில் பரவும் கொரோனா : ஒரே நாளில் 81 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு..

Fri Apr 2 , 2021
இந்தியா முழுவதும் மின்னல் வேகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 81,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது உலகளவில் கொரோனா பாதிப்பானது 13 .01 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 81,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,23,03,131 ஆக அதிகரித்துள்ளது .கொரோனா தொற்று […]
covid-test-in-india-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய