
வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்த வேளாண் அலுவலர் பதவிக்கான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் தற்போது இணையத்தில் சென்று பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை செப்டம்பர் 29ம் தேதி முதல் அக்டோபர் 7ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்கான அட்டவணையை வெளியீடும்.ஆனால் நடப்பாண்டில் 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 38 தேர்வுகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளுக்கு அறிவிப்புகள் வெளியாகவில்லை.2021ம் ஆண்டு தேர்வுகால அட்டவணையில் இடம்பெற்றுள்ள தேர்வுகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடத்தப்படும் என்றும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத் தாள் கட்டாயமாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.