6 முதல் 8 ஆம் வகுப்புக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்க பரிந்துரை : பள்ளிக்கல்வித் துறை ..

அக்டோபர் முதல் வாரத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளை தொடங்க கல்வி அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.

6 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாம் என்று சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அவர்கள், அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகளை திறக்க பரிந்துரை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும் 6 முதல் 8 ஆம் வகுப்புக்குப் பள்ளிகளைத் திறந்து 2 வாரத்திற்கு பிறகு அதன்விளைவுகளை பொறுத்து 1 முதல் 5 ஆம் வகுப்புக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 8 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்த ஆய்வு அறிக்கையை பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தமிழக முதல்வரை சந்தித்து வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

கொரோனா வைரஸ் 6 மாதங்களில் கட்டுக்குள் வர வாய்ப்பு - தேசிய நோய் தடுப்பு மையம்..

Thu Sep 16 , 2021
நாடு முழுவதும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கொரோனா 2-வது அலை தாக்கியது. இதில் ஒரு நாளைக்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டனர்.இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டன. மேலும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகப்படுத்தப்பட்டது. தற்போது கொரோனா தொற்று பாதிப்பு பெரும் அளவில் குறைந்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 75 கோடி டோஸ்க்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா தொற்று அடுத்த […]
corona-virus-3-rd-wave
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய