நீட் தோ்வு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவா்கள் அவரவா் பள்ளிகள் மூலம் விண்ணப்பிக்கலாம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..

நீட் தோ்வு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவா்கள் அவரவா் பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் வரும் செப். 12-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு இணையவழியில் கடந்த ஜூலை 13-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 6 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீட் எழுத விரும்பும் மாணவா்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து வருகின்றனா்.

இந்நிலையில் நீட் தோ்வு எழுத்தவுள்ள தமிழக அரசுப் பள்ளி மாணவா்கள் அவரவா் பள்ளிகள் மூலமாகவே விண்ணப்பிக்கலாம் எனவும், அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியா்கள் ஒருங்கிணைந்து உரிய நடைமுறைகளை பின்பற்றி ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

Next Post

டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தமிழுக்கு இனி முதலிடம்..

Tue Jul 20 , 2021
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும், டி.என்.பி.எஸ்.சி. வினா – விடைத்தாள் அறிக்கையில், தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் டி.என்.பி.எஸ்.சி. தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, மாநில தொழில்நெறி மையத்தில் இணையவழிப் பயிற்சி அளிக்கிறது. இந்த […]
tnpsc-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய