
ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி சி -51 (PSLV C51)செயற்கைக்கோளானது பிப்ரவரி 28 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் .
பி.எஸ்.எல்.வி சி -51(PSLV C51) செயற்கைகோளுடன் ,தனியார் துறையினர் தயாரித்துள்ள ஆனந்த் என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளும்,சாடிஷ் சாட் மற்றும் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பால் உருவாக்கப்பட்ட யுனி சாட் போன்ற 3 செயற்கைகோள்களும் விண்ணில் ஏவப்படவுள்ளது .விண்வெளித்துறையில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் அளவில் இந்த செயற்கைகோள்கள் இணைக்கப்பட்டுள்ளன .
பிரேசிலின் அமேசானிய -1 (விவசாயம் ,பேரிடர் மேலாண்மை ,காடுகள் கண்காணிப்பு) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளும் ,நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சந்திராயன்-3 செயற்கைக்கோளும் மற்றும் லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய மொத்தம் 21 செயற்ககைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி சி -51 (PSLV C51)செயற்கைக்கோளானது விண்ணில் பிப்ரவரி 28 ல் பாயவுள்ளது.