
நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி சட்டப் பிரச்சினைகள் காரணமாக 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா விண்வெளி மையத்தின் நிர்வாகி பில் நெல்சன் தெரிவித்துள்ளார்.
முதன்முதலில் அமெரிக்கா 1969-ம் ஆண்டு ஜூலை 21-ந்தேதி மனிதனை நிலவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.பின்னர் நாசா விண்வெளி மையம் பலமுறை மனிதனை நிலவுக்கு அனுப்பி சோதனை நடத்தியது. இதற்கு மிக அதிகமாக செலவானதால் அதன் பின்னர் மனிதர்கள் அனுப்பப்படவில்லை.
2024-ம் மீண்டும் மனிதனை நிலவுக்கு அனுப்பும் பணி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தனியார் விண்வெளி ஆய்வு மையமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. விண்வெளி வீரர்கள் பயணம் செய்வதற்காக ஆர்டிமிஸ் லூனர்-3 என்ற விண்வெளி ஓடத்தை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆனால் இதன் பணிகள் தாமதமாகி உள்ளதால்,இது சம்பந்தமாக வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.இதன் காரணமாக நிலவுக்கு மனிதனை அனுப்பும் பணி 2025-ம் ஆண்டுக்கு தள்ளி வைப்பதாக நாசா அறிவித்துள்ளது.