தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..

தமிழகத்தில் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கனமழை எச்சரிக்கை காரணமாக நவம்பர் 8, 9 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறஇருந்த தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு கனமழை இருப்பதால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறவிருந்த கணிதம், அறிவியல், சமூகவியல் பாடத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அறிவித்துள்ளார் .

ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூடுதல் விவரங்களை தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

TRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..

Tue Nov 9 , 2021
முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க நவம்பர் 14-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக இணையம் மூலம் விண்ணப்பிப்பதில் சிரமம் உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர் மழையின் காரணமாக இணையவழியாக விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்வதில் சில சிரமங்கள் உள்ளதால் இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 09.11.2021 லிருந்து 14.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்படுகிறது என […]
TRB-teachers-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய