பிளஸ் 2 மாணவர்கள் பெயர்ப்பட்டியல் திருத்தம் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு – அரசுத் தேர்வுகள் இயக்கம் ..

பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்ள , அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அரசுத் தேர்வுத் துறையால் பலமுறை வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றுமொரு இறுதி வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிகல்வித் துறை அறிவித்தது. தற்போது சமீபத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டது.

தற்போது தேர்வு முடிவு வெளியிடப்பட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியல்களில் மாணவர்களது தலைப்பெழுத்து , பெயர் , ( ஆங்கிலம் / தமிழ் ) பிறந்த தேதி , புகைப்படம் , பயிற்று மொழி ( Medium ) , மொழிப்பாடம் ( First Language ) ஆகியவற்றில் உள்ள திருத்தங்களை மேற்கொள்ளவும் , பள்ளியின் பெயரில் ( ஆங்கிலம் | தமிழ் ) திருத்தங்களை மேற்கொள்ளவும் தற்போது இறுதியாக ஒரு வாய்ப்பு பள்ளிகளுக்கு வழங்கப்படுவதாக அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

Next Post

தமிழகத்தில் வட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Tue Jul 27 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,767 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக கோவையில் 169 பேரும், சென்னையில் 139 பேரும், ஈரோட்டில் 132 பேரும், தஞ்சாவூரில் 102 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி 22,188 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் […]
district-wise-corona-status-in-TN-27-7-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய