
நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் சிபிஎஸ்சி மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு ரத்து மற்றும் மாநிலங்களில் பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கும் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.
இந்நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கான வழக்கு விசாரணை நீதிபதி ஏ.எம்.கான் வீல்கள் அமர்வில் நடைபெற்ற நிலையில், பிளஸ் 2 மாநில பொதுத்தேர்வை ரத்து செய்த மாநிலங்கள், அகமதிப்பீட்டு மதிப்பெண் முறையை 10 நாளைக்குள் உருவாக்கவேண்டும் என்றும், அந்த மதிப்பெண்களை ஜூலை 31ம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் மாநில பாடத்திட்டத்தின் கீழான பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் ரத்து செய்வதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.மேலும்,ஜூலை இறுதிக்குள் ஆந்திராவில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக நீதிபதிகள் வேதனை தெரிவித்ததோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.