
கொரோனா பெருந்தொற்று காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.இதன் காரணமாக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.அவர்களுக்கு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 50 சதவீதம், பிளஸ்-1 பொதுத்தேர்வில் 20 சதவீதம், பிளஸ்-2 செய்முறைத்தேர்வில் 30 சதவீதம் என்ற அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்தது.
பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதன் காரணமாக,மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வந்தது.இந்நிலையில் மதிப்பெண் தயாரிக்கும் பணிகள் நிறைவு பெற்ற நிலையில்,வரும் 19ம் தேதி காலை 11 மணிக்கு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தங்களது மதிப்பெண்களை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில் சென்று தெரிந்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.மேலும் மாணவர்களுக்கு குறுஞ்செய்தி மூலமாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும், மாணவர்கள் தங்களது மதிப்பெண் பட்டியலை 22.07.2021 அன்று காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in, http://www.dge.tn.nic.in என்ற இணையதளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்குறிப்பிட்ட இணையதளங்கள் மூலம் மாணவர்கள், பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து மதிப்பெண் பட்டியலையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.