பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவு, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை வெளியீடு..

தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 2021 நடைபெற்ற 12-ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு, மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாமாண்டு துணை பொதுத் தேர்வு எழுதி,மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களுள் மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது தேர்வெண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 22.10.2021 அன்று முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்பட்டியலில் இடம்பெறாத தேர்வெண்களுக்குரிய தேர்வர்களின் விடைத்தாள்களில் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்கள் மட்டும் மேற்கண்ட இணையதளத்தில் தங்களது தேர்வு எண் (ரோல் நம்பர்) மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை உடனே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் சற்று அதிகரித்த கொரோனா பாதிப்பு : புதிதாக 18,454 பேருக்கு கொரோனா தொற்று..

Thu Oct 21 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 18,454 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு 15 ஆயிரத்துக்குள் இருந்தது. இந்நிலையில் பாதிப்பு சற்று உயர்ந்து 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,27,450 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 160 பேர் உயிரிழந்துள்ளனர். […]
covid19-RTPCR-test
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய