பிளஸ் 1 துணைத்தேர்வு முடிவுகள் நவம்பர் 9-ம் தேதி வெளியீடு..

செப்டம்பர் 2021 மாதத்தில் மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத்தேர்வு எழுதிய மாணவர்கள் ,தங்களது முடிவுகளை நவம்பர் 9 அன்று மதிப்பெண் பட்டியளாகவே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுதிய தேர்வர்கள் தங்களது தேர்வு முடிவை மதிப்பெண் பட்டியலாக 09.11.2021 காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செப்டம்பர் 2021 மேல்நிலை முதலாம் ஆண்டு துணைத் தேர்வெழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களுக்குத் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்களும் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றி, மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

Next Post

புதுச்சேரியில் சென்டாக் மூலம் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை ..

Sat Nov 6 , 2021
புதுச்சேரி மாநிலத்தில் சென்டாக் மூலம் உயர் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்த வகையில் நீட் தேர்வு முடிவு வெளியான நிலையில், அதில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் சென்டாக் மூலம் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளங்கலை மருத்துவம், பல் மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் கால்நடை மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கும் நவம்பர் 8-ஆம் தேதி முதல் சென்டாக் […]
CENTAC-Medical-application-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய