குழந்தைகளை தாக்கும் பிம்ஸ் நோய் – பெற்றோர்கள் கவனத்திற்கு …பிம்ஸ் நோயின் அறிகுறிகள் என்னென்ன?..

பிம்ஸ் நோயானது குழந்தைகளை குறிவைத்து தாக்கும் நோயாகும் .இது 5 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளை தாக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .பிம்ஸ் நோயானது குழந்தைகளின் இதயத்தை தாக்கும் எனவும் எச்சரித்துள்ளனர் .குழந்தைகள் 20 வயதை எட்டும் நிலையில் அவர்களுக்கு மாரடைப்பு ஆனது ஏற்படும் அபாயம் உள்ளது .

பிம்ஸ் நோயானது ஏப்ரல் மாதத்தில் பல நாடுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளது .ஆனால் இந்தியாவில் இந்நோயின் அறிகுறியானது ஜூன் மாதத்திற்கு பிறகே கண்டறியப்பட்டது.இங்கிலாந்து போன்ற உலக நாடுகளில் இந்நோயின் பாதிப்பு அறியப்பட்ட நிலையில் இதற்கு பிம்ஸ் என பெயரிடப்பட்டது .

பிம்ஸ் நோய் குழந்தைகளே தாக்குவது எப்படி ?

பிம்ஸ் நொயானது ,கொரோனவால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுடன் குழந்தைகள் இருக்கும்போது அவர்களுக்கு இந்நோய் பாதிப்பானது ஏற்படுகிறது .இந்நோய் ஏற்பட்ட குழந்தைகள் 2 அல்லது 3 வாரங்கள் கழித்து அக்குழந்தைகளின் உடலினுள் சிறு மாற்றங்கள் ஏற்படுகிறது.

பிம்ஸ் நோயின் அறிகுறிகள் ?

பிம்ஸ் நோயின் அறிகுறிகழானது இந்நோய் ஏற்பட்ட குழந்தைகளுக்கு திடீரென காய்ச்சல் ,சளி மற்றும் தோள்கள் சிவந்து காணப்படுவதே இந்நோயின் முக்கிய அறிகுறியாகும் .

பிம்ஸ் நோயின் தாக்கத்தால் இதுவரை 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .அனுமதிக்கப்பட்ட 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் நல்ல சிகிச்சைக்கு பின்னர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என எழும்பூர் அரசு மருத்துவமனையின் இயக்குனர் அறிவித்துள்ளார் .இருப்பினும் இந்நோய்க்கு மருந்து மற்றும் முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் முழுமையாக நோயிலிருந்து விடுபடலாம் என்பது சற்றே ஆறுதல் அளித்துள்ளது .

கொரோன பாதித்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளுக்கு பிம்ஸ் நோய் பரவும் என்பது உறுதியானது அல்ல .நீண்ட காய்ச்சல் ,மற்றும் சளி இருந்தால் உடனே மருத்துவரை அணுகுதல் நல்லதாகும் .
கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில் பிம்ஸ் நோயானது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது ,எனவே பெற்றோர்கள் குழந்தைகள் மீது அதிக கவனத்தை செலுத்துதல் நல்லது ஆகும் .

Next Post

விண்ணில் இன்று பிரகாசமாக தெரியும் செவ்வாய் கிரகம் ! செவ்வாயை பெரிதாக காண்பது எப்படி!

Tue Oct 13 , 2020
இன்றிரவு(செவ்வாய்க்கிழமை ) செவ்வாய்கிரகத்தை வீட்டில் இருந்தபடியே பிரகாசமாக காணமுடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .கிரீன்விச் நேரப்படி, இன்றிரவு 23:20 நேரப்படி உற்றுநோக்கலாம் என வானவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.. பூமிக்கு மிக அருகில் செவ்வாய் வருவதே இதற்கு முக்கிய கரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர் .இந்திய நேரப்படி புதன்கிழமை அதிகாலை 4:50 மணியளவில் இந்த அறிய நிகழ்வு நிகழுமென்று அறியப்படுகிறது.. பூமி – செவ்வாய் – சூரியன் ஆகிய மூன்று கோள்களும் […]
mars-planet
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய