![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/10/NEET-Result-Announced.jpg)
நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 12-ந்தேதி நடந்தது. இத்தேர்வை சுமார் 16 லட்சம் பேர் எழுதினார்கள்.
இந்நிலையில் 2 மாணவர்கள் தங்களது வினாத்தாள் மற்றும் விடைத்தாள் ஆகியவற்றில் உள்ள எண்கள் தவறாக பொருத்தப்பட்டதாகவும், கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளனர் என்றும் தெரிவித்தனர்.மேலும் இந்த 2 பேரும் தங்களுக்கு நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரி மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனுவை விசாரித்த மும்பை ஐகோர்ட்டு 2 மாணவர்களுக்கும் நீட் மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், அதன் பின்னரே நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தேசிய தேர்வு முகமை உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தது .இதில் கண்காணிப்பாளர்கள் தவறு செய்துள்ளதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இரண்டு மாணவர்களுக்காக 16 லட்சம் மாணவர்களுக்கான முடிவுகளை தாமதப்படுத்த முடியாது. இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை என்று நீதிபதி இன்று உத்தரவிட்டனர்.மேலும் அந்த மாணவர்களின் நலன்களை சமநிலைபடுத்த வேண்டும். தேர்வு நாளில் ஏற்பட்ட குழப்பத்தால் நேரத்தை இழந்த 2 மாணவர்களுக்கு என்ன செய்வது என்பது குறித்த திட்டம் பற்றி தேசிய தேர்வு முகமை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.