
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துணை மருத்துவப்படிப்புகளான பி.எஸ்சி நர்சிங் ,பி.பார்ம் ,பிபிடி,பிஏஎஸ்எல்பி போன்ற துணை மருத்துவம் சார்ந்த 17 படிப்புகளுக்கு இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) கலந்தாய்வு தொடங்குகிறது .
நடப்பாண்டில் சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு ,இணையவழியே சுமார் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர் .விண்ணப்பிக்கப்பட்ட அனைத்து விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு ,மொத்தம் 37,344 பேர் கொண்ட தரவரிசைப் பட்டியல் ஆனது இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது .
இந்நிலையில் துணை மருத்துவப்படிப்புகளில் சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு ,சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காலை 9 .30 மணியளவில் நடைப்பெற்றது .இதனைத் தொடர்ந்து பொதுக் கலந்தாய்வு ஆனது பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை இணையவழியில் நடைபெறும் .மேலும் இணையவழியில் நடைபெறுவதற்கான சில வழிமுறைகளை சுகாதாரத் துறை இணையதளங்களில் தெரிந்துக் கொள்ளலாம் .ஆன்லைன் கலந்தாய்விற்கு கட்டணமாக ரூ .250 செலுத்தி கலந்தாய்விற்கான இடத்தினை தேர்வு செய்து கொள்ளலாம் .