
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16வது பாராஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. இன்று காலை பேட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவிற்கு இரண்டு பதக்கங்கள் உறுதியாகியுள்ளது.
இன்று நடைப்பெற்ற 50 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியின் ஒரே பிரிவில் இந்திய வீரர்கள் மணீஷ் நர்வால் தங்கம், சிங்ராஜ் வெள்ளி பதக்கம் வென்றுள்ளனர்.
முன்னதாக கலப்பு பிரிவு பாராஒலிம்பில் துப்பாக்கிச் சுடுதல் 50 மீ எஸ்.எச் 1 பிரிவில் இந்தியாவின் சிங்ராஜ் மற்றும் மணிஷ் நார்வால் ஆகியோர் பங்கேற்றனர். இந்த போட்டியில், 218.2 புள்ளிகளுடன் மணிஷ் நார்வால் முதல் இடத்திலும், 216.7 புள்ளிகளுடன் சிங்ராஜ் இரண்டாம் இடத்திலும் நிறைவு செய்தனர். 10 மீட்டர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் சிங்ராஜ் ஏற்கனவே வெண்கலம் வென்ற நிலையில் தற்போது வெள்ளி வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாராலிம்பிக்கில் 3 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலத்துடன் 15 பதக்கங்களுடன் பட்டியலில் 34வது இடத்தில் இந்தியா உள்ளது.