
புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நவம்பர் 8ஆம் தேதியில் இருந்து பள்ளிகள் திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாரத்திற்கு 6 நாட்கள் அரை நாள் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 8ஆம் வகுப்புக்கு பள்ளியில் மத்திய உணவு வழங்கப்படாது என்றும், நகர் பகுதிகளில் 9 மணி முதல் 1 மணி வரையும், கிராமப்புறங்களில் 9:30 முதல் 1 மணி வரையிலும் பள்ளிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது.
மாணவர்களை பெற்றோர்கள் சுயவிருப்பத்தின் பேரில் பள்ளிகளுக்கு அனுப்பலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல 1 முதல் 8ஆம் வகுப்புக்கு ஆன்லைன் வகுப்புகளும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.