
ஆசிரியர் பணிக்கு தேர்வாக இருக்கும், பி.எட்., மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செய்முறை தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பி.எட்., மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செய்முறை தேர்வுகள் வரும் 12 முதல் 17ம் தேதி வரை ஆன்லைன் வழியில், அந்தந்த கல்லுாரிகளில் செய்முறை தேர்வுகள் நடத்தப்படும் என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தன் சுற்றறிக்கை தற்போது வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் பணிக்கு வரும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்தி, செய்முறை பயிற்சி வழங்கப்படும். மேலும், பள்ளிகளில் இருந்து மாணவ – மாணவியரின் கற்பித்தல் திறன் தொடர்பாக மதிப்பெண் வழங்கப்படும்.அதன்பின், நேரடியாக செய்முறை தேர்வுகள் நடத்தப்படும். 90 சதவீதத்துக்கு அதிகமாக மதிப்பெண் பெறுவோருக்கு, பல்கலை வளாகத்தில் மறுதேர்வு நடத்தப்பட்டு, அந்த மதிப்பெண்ணே இறுதி செய்யப்படும் என்று ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.