என்ஜினீயரிங் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு 27-ந்தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு..

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 17-ந்தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது.

மாணவர்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் எந்தெந்த மாணவர்கள்? எந்தெந்த தேதியில்? ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்த அட்டவணையும், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு ஏதுவாக கடந்த கல்வியாண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளின் திறன் அறிக்கையும் தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

பொறியியல் மாணவர் சேர்க்கையானது ஆன்லைன் மூலம் நடைபெற இருப்பதால்,முதலில் கலந்தாய்வுக்கான கட்டணம் செலுத்தி, அதன் பின்னர், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கும், தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் அவகாசம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பள்ளிகளுக்கு புதிய பாடத் திட்டம் : மத்திய கல்வி அமைச்சகம்

Thu Sep 23 , 2021
பள்ளிகளுக்கு புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவதற்கான 12 பேர் கொண்ட குழுவை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று அமைத்தது.இந்த குழுவிற்கு கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.புதிய பாடத்திட்ட குழு தலைவரான கஸ்தூரிரங்கன் முன்னாள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய பாடத் திட்டக்குழுவில் தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிா்வாக நிறுவனத்தின் வேந்தா் மகேஷ் சந்திர பந்த், ஜாமியா மில்லியா […]
new-syllabus-for-school-students
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய