
ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் இன்று (அக்டோபர் 5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்படுகின்றன. முதல் நாளான இன்று மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டறிந்ததற்காக டேவிட் ஜூலியஸ், ஆர்டெம் பட்டபோர்ஷியன் ஆகிய இருவருக்கும் 2021 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பம், குளிர் மற்றும் தொடுதல் ஆகியவை நரம்பு மண்டலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் அது அனுப்பும் சமிக்ஞைகள் குறித்த விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு, நாள்பட்ட வலி தொடர்பான சிகிச்சைக்கும் பல்வேறு நோய்நிலைக்கான சிகிச்சைக்கும் பயன்படும்.
மேலும் அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.