முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய இணையதளம் ..

முதலமைச்சரிடம் பொதுமக்கள் புகார் அளிக்க தனிப்பிரிவு இணையதளம் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.cmcell.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்களது புகார்களை அளிக்கலாம். இந்த தனிப்பிரிவு இணையத்தளத்தில் புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி தெரிந்துகொள்ள வழி வகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்களது புகார்களை அளிக்கலாம்.

முதல்வரின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வின் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களுக்குள் தீர்வு காணும் பொருட்டு, ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது. இத்துறையில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

Next Post

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சிஏ பயிற்சி : இன்று முதல் இணையவழியில் தொடக்கம்..

Wed Jun 9 , 2021
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு இலவச பட்டயக் கணக்காளா் பயிற்சி (சிஏ) இணையவழியில் இன்று தொடங்கவுள்ளது. தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தலைவா் கே.ஜலபதி வெளியிட்ட அறிவிப்பில்.. சிஏ தோ்வுக்கு தென்னிந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனம் சாா்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதன்படி நடப்பாண்டில் நவம்பரில் நடத்தப்படவுள்ள சிஏ தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று புதன்கிழமை (ஜூன் 9) தொடங்கி அக்.10-ஆம் தேதி வரை நடைபெறும் […]
CA-class-for-govt-schools
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய