
புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் தென்னாப்பிரிக்காவில் கடந்த சில தினங்களுக்கு முன் பி.1.1.529 என்று அடையாளம் காணப்பட்டது.இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகளை கடுமையாக பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
தற்போது இந்தியாவில் இதுவரை புதிய வகை உருமாற்ற கொரோனா எதுவும் இதுவரை பதிவாகவில்லை என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் :
- B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை உருமாறிய கொரோனா ,புரத கூர்முனைகளில் அதிக அளவில் மாற்றங்கள் ஏற்படுத்துவது தடுப்பூசிக்கு எதிராக போராடும் அதன் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் இதன் பரவல் தன்மை அதிகரித்து தீவிரமான அறிகுறிகளுக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- புதிய வகை கொரோனாவில் மொத்தமாக 50 மாற்றங்கள் தென்பட்டுள்ளது. அதில், 30க்கும் மேற்பட்ட மாற்றங்கள் புரத கூர்முனைகளில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போது செலுத்தப்பட்டுவரும் கொரோனா தடுப்பூசியின் இலக்காக இந்த புரத கூர்முனைகளே உள்ளன. உடலில் உள்ள அணுக்களை கடந்து உள் புகுவதற்கு இந்த புரத கூர்முனைகளையே வைரஸ் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.