
கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா தொற்றானது அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.உலக சுகாதார அமைப்பானது சில நாடுகளில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ்க்கு பெயர்களை அறிவித்துள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு B.1.617 என்ற பெயரை மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபரில் கண்டறியப்பட்ட B.1.617 வகை கொரோனா வைரசுக்கு டெல்டா என பெயரிட்டுள்ளது.
இதேபோல் பல்வேறு நாடுகளில் பரவி உள்ள உருமாறிய கொரோனா வைரஸ்க்கு உலக சுகாதார அமைப்பு பல்வேறு பெயர்களை சூட்டியுள்ளது.
*பிரிட்டனில் கடந்த ஆண்டு செப்டம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்க்கு ஆல்பா என பெயரிடப்பட்டுள்ளது.
*தென் ஆப்பிரிக்காவில் 2020 மே மாதம் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ்க்கு பீட்டா என பெயரிடப்பட்டுள்ளது.
*பிரேசிலில் கடந்த ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வகை காமா வைரஸ்க்கு என பெயரிடப்பட்டுள்ளது.
*அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா எப்சிலான் எனவும் உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.