புற்றுநோய் சிகிச்சைக்கு – புதிய கண்டுபிடிப்பு :

புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டென்ட் மூலம் சிகிச்சை அளிக்கும் புதியமுறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .இதயத்தில் ஏற்படும் அடைப்பை நீக்குவதற்கு பயன்படுத்தப்படும் ஸ்டென்ட் சிகிச்சையானது தற்போது புற்றுநோய் சிகிச்சைக்கும் பயன்படுகிறது .

தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்(Unisa University) மற்றும் பிளிண்ட்டர்ஸ் பல்கலைக்கழகத்தின்(Flinders University) ஆராய்ச்சியாளர்கள் ,மருந்தினை ஸ்டென்ட் மூலம் வழங்கும் ,உணவுக்குழாய் ஸ்டென்டை புற்றுநோய் சிகிச்சைக்காக உருவாக்கியுள்ளனர் .

உலகின் முதலில் பாலியூரிதீன் இழைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட 3 டி அச்சிடப்பட்ட ஸ்டென்டில்,ஹீமோதெரபி/வேதி சிகிச்சையில் ,5 ப்ளுரூராசில்(5-flourouracil) போன்ற மருந்துப் பொருட்கள் அடங்கியுள்ளன .புற்றுநோய் கட்டியின் மீது 5 ப்ளுரூராசில் என்ற மருந்தை நேரடியாக வைக்கலாம் .அதாவது ,ஸ்டென்டுகள் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை 110 நாட்களுக்கு நேரடியாக புற்றுநோயின் களத்திலேயே வைத்திருக்கும் ,மேலும் புற்றுநோய் வளரவிடாமல் தடுக்கின்றன .

உணவுக்குழாய் என்பது வாய் மற்றும் வயிற்றுப்பகுதியை இணைக்கும் ஒரு அங்கமாகும் .உணவுக்குழாய் புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது ஒரு பெரும் சவாலும் ,சிக்கலும் நிறைந்ததாகும் .ஆரம்ப காலத்தில் நோயை கண்டறிதல் என்பது நேர்மறையான விளைவுகளுக்கு காரணமாகும் . வீரியமிக்க புற்றுநோய் செல்கள் உணவுக்குழாயை தடுக்கும் காரணமாக ஏற்படும் டிஸ்பேஜியா மிக முக்கியமான அறிகுறியாகும் என்று யூனிசாவின் பாரிஸ் பொளலாடியான் கூறியுள்ளார் .

இந்த புதியவகை மருந்து ,உணவுக்குழாய் ஸ்டென்டுக்கு ஏற்றப்பட்டு புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளை நேரடியாக புற்றுநோய் கட்டிக்கு வழங்குவதன் மூலம் மேலும் விளைவுகளை தடுக்க உதவுகிறது .மேலும் டிஸ்பிஜியாவின் அழுத்தத்தை நிவர்த்தி செய்யும்போது மேலும் வளர்ச்சியை கட்டுப்படுத்துகிறது .

யூனிசாவின் இயக்குனர் (கண்டுபிடிப்பு மற்றும் மேம்பாட்டுக்குழு ) சஞ்சய் கார்க் கூறுகையில் ,மருந்துகள் மற்றும் மருத்துவ சாதனங்களை இணைக்கும் 3டி அச்சிடும் செயல்முறைகள் ,மருந்துகள் வழங்கும் முறையை மாற்றுவதற்கான வேகத்தில் உள்ளன என கூறியுள்ளார் .மேலும் இந்த புதிய தொழில்நுட்பமானது உணவுக்குழாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும் பலனை அளிக்கும் என்று மேம்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது .மேலும் துல்லியமான தனிப்பயனாக்கப்பட்ட மருந்து விநியோக முறைகளை வடிவமைக்க 3 டி அச்சிடும் திறனை நாங்கள் ஆராய்ச்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர் .

Next Post

ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர்களுக்கான (Civil ,Electrical) வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.02 .2021

Mon Feb 8 , 2021
இந்திய ரிசர்வ் வங்கியில் ஜூனியர் இன்ஜினியர்களுக்கான (சிவில் மற்றும் எலக்ட்ரிகல் பிரிவில்) காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது .இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . 01 .ஜூனியர் என்ஜினீயர் (Junior Engineer): மொத்த காலியிடங்கள் : 48மாத சம்பளம் : ரூ .21,400 – 52,105பணிக்கான இடம் : இந்தியா முழுவதும்தகுதி : தகுதியான விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் பட்டம்(Any Degree), டிப்ளோமா(Diploma) முடித்திருக்க வேண்டும்.வயது வரம்பு : 20 […]
RBI-recruitment-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய