புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி – எலிகளுக்கு செலுத்தி சோதனை..

அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய உலகளாவிய கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.மேலும் இந்த தடுப்பூசியை எலிகளுக்கு செலுத்தி சோதனை செய்ததில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் ஆனது,உலகமெங்கும் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.இந்த கொடிய வைரஸானது அவ்வப்போது உருமாறி வருகிறது.இந்த கொடிய வைரஸை முழுமையாக ஒழிக்க பல்வேறு முயற்சிகளில் மருத்துவ அறிஞர்களும்,விஞ்ஞானிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உலகளாவிய தடுப்பூசி ஒன்றை அமெரிக்கா விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.மேலும் இந்த தடுப்பூசி பற்றிய தகவல்கள் பத்திரிக்கை ஒன்றில் வெளியாகியுள்ளது.

  • கொரோனா வைரஸ் என்னும் பெரிய குடும்பத்தின் அங்கமாக சர்பேகோ வைரஸ்கள் உள்ளன. கடந்த 2 சாகாப்தங்களில் (20 ஆண்டுகளில்) பேரழிவு ஏற்படுத்திய 2 நோய்களுக்கு (சார்ஸ் மற்றும் கொரோனா) பிறகு நச்சுயிரியல் வல்லுனர்களின் முன்னுரிமையாக சர்பேகோ வைரஸ்கள் அமைந்துள்ளன.
  • இந்த விஞ்ஞானிகள் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. தடுப்புடன் தங்களது அணுகுமுறையை தொடங்கினர். மேலும் இது பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசி போன்றதாகும்.
  • இருப்பினும் ஒரு வைரசுக்கான மெசேஞ்சர் ஆர்.என்.ஏ. குறியீட்டைச் சேர்ப்பதற்கு பதிலாக, பல வைரஸ்களின் மெசேஞ்சர் ஆர்.என்.ஏ.க்களை சேர்த்தனர்.
  • எலிகளுக்கு இந்த கலப்பின தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதில் பல ஸ்பைக் புரதங்களுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு பொருள் (ஆன்டிபாடிஸ்) உருவானது. இது நல்ல பலனாகும்.
  • புதிய உருமாறிய வைரஸ்கள் கண்டறியப்படுகிறபோது, இந்த தடுப்பூசி அதற்கு எதிராக செயல்படும் என்று கூறப்படுகிறது.
  • எலிகளிடம் தற்போது மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் அடுத்த ஆண்டு மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுபற்றி விஞ்ஞானி டேவிட் மார்டினேஸ் கூறுகிறபோது, “எங்கள் கண்டுபிடிப்பு எதிர்காலத்துக்கான பிரகாசமாக தெரிகிறது. நாங்கள் மனிதர்களில் ஆபத்தை ஏற்படுத்தும் வைரஸ்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கூடுதலான தடுப்பூசிகளை வடிவமைக்க முடியும்” என தெரிவித்துள்ளார். மேலும், இதன் மூலம் சார்ஸ்-கோவ் 3 வைரசையும் தடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Next Post

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் – இன்று புதிதாக 51,667 பேருக்கு கொரோனா தொற்று..

Fri Jun 25 , 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது.கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 51,667 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,01,34,445 ஆக உயர்ந்துள்ளது. […]
corona-test-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய