
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில் புதிய ‘இருமுறை உருமாறிய கொரோனா’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்சாகாக் என்ற 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை உருவாகியுள்ளது .இந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வானது நடந்து வருகிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து சுமார் 10,787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் இன்சாகாக் ஆய்வு கூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.இதில் ,771 உருமாறிய கொரோனாவை இன்சாகாக் குழுமம் கண்டுபிடித்துள்ளது.இதில் 736 மாதிரிகள் இங்கிலாந்து உருமாறிய கொரோனாவையும் மற்றும் 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும் கொண்டுள்ளது.
இந்திய மாநிலங்களிலிருந்து அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிய ‘இருமுறை மரபணு உருமாறிய கொரோனா’ கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவை, இவை தொற்றை அதிகப்படுத்தக்கூடியவை.இந்தியாவில் மராட்டியம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட கொரோனா மாதிரிகளில் மரபணு உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன.