தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,179 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி 14,326 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 1,407 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில்,இதுவரை 26,39,209 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 35,928 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 16 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 127 பேரும், ஈரோட்டில் 82 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்
