இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 45,352 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,29,57,937 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 366 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,39,895 ஆக உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் படி, இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,20,63,616 ஆக உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 34,791 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,99,778 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 67,09,59,968 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்தாலும், கொரோனா தடுப்பு விதிகளை மக்கள் முறையாக கடைப்பிடிக்காவிட்டால் மூன்றாவது அலை ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Next Post

அரசு கவின் கலைக் கல்லூரிகளில் மாணவர் சோ்க்கை..

Fri Sep 3 , 2021
தமிழகத்தில் அரசு கவின் கலைக் கல்லூரிகளில் சேர்வதற்கு , வரும் 13-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசின் கலை பண்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் சென்னை, கும்பகோணம் ஆகிய இடங்களில் கவின் கலைக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு கவின் கலைக் கல்லூரியில் காட்சித் தொடா்பு வடிவமைப்பு, வண்ணக்கலை, சிற்பக்கலை, ஆலையக சுடுமண் வடிவமைப்பு, ஆலையக துகிலியல் வடிவமைப்பு, பதிப்போவியம் ஆகிய படிப்புகள் உள்ளன.இந்த படிப்புகள் நான்காண்டு […]
govt-college-of-fine-arts-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய