தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்றைய நிலவரப்படி 16,637 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை நோய்த் தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 35,707-ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 21 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 176 பேரும், கோவையில் 149 பேரும், செங்கல்பட்டில் 110 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறையின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் இன்று புதிதாக 1 லட்சத்து 44 ஆயிரத்து 832 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்
![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/10/district-wise-corona-updates-06-10-2021.jpg)
![](https://tamil.aptinfo.in/wp-content/uploads/2021/10/district-wise-corona-positive-cases-updates-06-10-2021.jpg)