
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது .
மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ,இன்று காலை நிலவரப்படி புதிதாக 18,599 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது தீவிரத்தை அடைந்து வருகிறது .
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின்(ICMR) புள்ளிவிவரப்படி ,இதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,08,82,798 ஆக உள்ளது.கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,57,853 ஆக உள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,88,747 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .