இந்தியாவில் 12,286 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று: மத்திய சுகாதாரத் துறை ..

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 12,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 91 ஆக உள்ளது .

இன்று காலை 8 மணி நிலவரப்படி (கடந்த 24 மணி நேரத்தில்) ,புதிதாக 12,286 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,11,24,527 ஆக உள்ளது .

இதுவரை கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 1,07,98,921 ஆகவும் ,கொரோனா பாதிப்பின் காரணமாக உயிரிழந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 1,57,248 ஆக உள்ளது .

நாடு முழுவதும் தற்போது கொரோனவுக்காக 1,68,358 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் .நேற்று மாலை (திங்கட்கிழமை) நிலவரப்படி நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 1,48,54,136 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது .

Next Post

தமிழகத்தில் நுழைவுத் தேர்வு மூலம் 11-ம் வகுப்பு மாணவர் சேர்க்கை : பள்ளி கல்வித் துறை ..

Tue Mar 2 , 2021
தமிழகத்தில் 11 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கையானது நுழைவுத் தேர்வு மூலம் நடைபெற இருப்பதாக பள்ளி கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதற்கான திட்டமும் ,புதிய ஏற்பாடுகளும் நடைபெற்றது இருப்பதாக கூறப்படுகிறது . சமீபத்தில் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வானது ரத்து செய்யப்பட்டது . கொரோனா பரவல் காரணமாகவும் ,மேலும் ஆசிரியர் ,பெற்றோர் கருத்துக்களை கேட்டரிந்த நிலையிலும் மற்றும் பிற தொடர் ஆலோசனைகளுக்குப் பிறகும் […]
11th-admission-DPI
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய