
புதிய ரக கொரோனா வைரஸ் ஆனது சமீபத்தில் பிரிட்டனில் கண்டறியப்பட்டது .அதி தீவிரமாக பரவி வரும் இந்த கொடிய கொரோனா பல்வேறு தகவமைப்பைக் கொண்டுள்ளதாக தெரிகிறது .
முந்தைய கொரோனா வைரஸ் -ன் தாக்கத்தை விட தற்போது பரவி வரும் புதிய ரக கொரோனா வைரஸ் 70 சதவிகிதம் அதிக பரவும் தன்மையை கொண்டுள்ளது . சமீபத்தில் பிரிட்டனில் கொரோனாவின் தாக்கம் அதிகமாகி வருவதை இது விளக்குகிறது .இதனை தொடர்ந்து பிரிட்டனில் கொரானாவின் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது .
இந்த புதியவகை கொரோனா வைரஸ் ,முன்புவந்த கொரோனா வைரஸை காட்டிலும் மிக வேகமாக பரவ கூடியதாகும் .ஆனால் இந்த வைரஸ் மிக பயங்கரமான வைரஸ் என உறுதிப்படுத்தவில்லை என அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் .
புதிய ரக கொரோனா வைரஸில் 12 மேற்பட்ட மாறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இதில் இருக்கும் சில வைரஸ்கள் மனித உடலில் இருக்கும் புரதத்துடன் ஒட்டிக் கொண்டு செல்களை பாதிக்கும் என்ற அபாயமும் உள்ளது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர் .