
முதுகலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு வரும் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடப்பாண்டிற்க்கான இளநிலை மாணவர்களுக்கு செப்டம்பர் 12ல் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது முதுநிலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான நீட் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி முதுகலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.