சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் – டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

படகு ஓட்டும் போட்டிக்காக ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை சென்னையைச் சார்ந்த நேத்ரா குமணன் பெற்றுள்ளார்.இதுவரை படகு ஓட்டும் போட்டியில் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக இடம்பெற்ற ஒன்பது பேருமே ஆண்களாவர்.தற்போது முதல் முறையாக இந்திய வீராங்கனை தகுதி பெற்றிருப்பது பெரும் சாதனையாகும்.

ஓமனில் முசானா ஓபன் போட்டி நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் லேசர் ரேடிகல் பிரிவில் சக இந்தியரான ரம்யா சரவணனைவிட 21 புள்ளிகள் அதிகம் பெற்று கடைசி சுற்றுக்கு முன்பே முதலிடத்தை அவர் உறுதி செய்தார்.இதனைத் தொடர்ந்து டோக்கியோ ஒலிம்பிக் போட்டிற்கு நேத்ரா குமணன் தகுதி பெற்றுள்ளார்.

இந்தியா சார்பாக நடைப்பெற்ற 2014 மற்றும் 2018 அம்ம ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நேத்ரா குமணன் பங்குபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

என்இஎஸ்டி நுழைவுத் தேர்வு : மே 20 முதல் நுழைவுச் சீட்டு வெளியீடு..

Fri Apr 9 , 2021
என்இஎஸ்டி நுழைவுத் தேர்வானது தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாணவர் சேர்வதற்க்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வாகும்.நடப்பாண்டிற்கான என்இஎஸ்டி நுழைவுத் தேர்வானது வரும் ஜூன் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் NEST மற்றும் மும்பை பல்கலைக்கழகத்தில் உள்ள அணுசக்தி அறிவியல் பாடப்பிரிவுகளுக்காண மாணவர் சேர்க்கையானது என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள் மூலம் நடைபெறுகிறது. என்இஎஸ்டி நுழைவுத் தேர்வுகள் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 90 நகரங்களில் நடைபெற […]
NEST-entrance-exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய