கொரோனா தொற்றின் 5 -க்கும் மேற்பட்ட அறிகுறிகள் ?

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு உடல் சோர்வு, மூச்சு திணறல், தசை வலி, இருமல், மூட்டு வலி, நெஞ்சுவலி, வாசனை உணராமை, வயிற்றுப்போக்கு, சுவையின்மை ஆகியவை அறிகுறிகளாக சொல்லப்பட்டன.

கொரோனா அறிகுறிகள் தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வின் முடிவுகளை ராயல் சொசைட்டி ஆப் மெடிசின் என்ற பத்திரிக்கையில் வெளியிட்டனர்.ஆராய்ச்சியின் முடிவில் கொரோனா பாதிப்புக்கு 5-க்கும் மேற்பட்ட அறிகுறிகளுடன் ஒருவர் ஆளாகிறபோது, அவர் மாதக்கணக்கில் கொரோனா தொற்றினால் மோசமாக அவதிப்பட நேரிடும் என்று தெரியவந்துள்ளது.

குறிப்பாக ஒருவருக்கு உடல் சோர்வு, தலைவலி, மூக்கு ஒழுகுதல், இருமல், நாசி நெரிசல் ஆகியவற்றுடன் சுவாச கோளாறு இருந்தால் நீண்ட காலம் கொரோனா பாதிப்பு இருக்கும் என்று இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர், கொரோனாவால் 8 வாரங்களுக்கு மேலாக மோசமாக பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

Next Post

மாவட்ட வாரியாக தமிழகத்தில் கொரோனா நிலவரம்..

Sat Jul 17 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,205 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 241, ஈரோட்டில் 143 பேருக்கும்,சேலத்தில் 163 பேருக்கும், தஞ்சாவூரில் 152 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 137 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த […]
district-wise-corona-status-in-TN-17-7-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய