
நேரடி முறையில் சட்ட பல்கலை. தேர்வு நடைபெறும் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.சட்ட படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 20-ம் தேதி முதல் நேரடி முறையில் நடைபெறும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்றின் கரணமாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக மூன்று பருவத் தேர்வுகளையும் இணையவழி வாயிலாகவே நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெளியிட்ட அறிக்கையில்,தமிழக அரசின் ஆணைக்கிணங்க அனைத்து பயிற்று வகுப்புகளும் நேரடி வகுப்புகளாக நடத்தப்பட்டு வருகிறது என்றும், சட்டக் கல்வியின் தரத்தினை பேணும் வகையில் பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் இனி நேரடித் தேர்வாக மட்டுமே நடத்தப்படும் என்றும் அத்தேர்வுகள் வரும் டிசம்பர் மாதம் 20-ஆம் தேதியில் தொடங்கி சீர்மிகு சட்டப் பள்ளி உட்பட பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் நேரடித் தேர்வாக நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.