“இல்லம் தேடி கல்வி” என்ற புதிய திட்டம் தொடக்கம் : பள்ளிக்கல்வித்துறை..

“இல்லம் தேடி கல்வி” என்ற புதிய திட்டத்திற்கான விழிப்புணர்வு வாகனங்களை பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று துவங்கி வைத்துள்ளார்.

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடுகளைப் போக்க, இல்லம் தேடிக் கல்வி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,தற்போது இத்திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.இந்நிலையில், 1-8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் குறைபாடைப் போக்க, அவர்களின் இல்லங்களுக்கே சென்று பாடம் நடத்தும் “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சென்னையில் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

1 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் தஞ்சை , திருச்சி . கடலூர் உட்பட 12 மாவட்டங்களில் வீடு தேடி பள்ளி என்ற மாலை நேர கல்வி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்ந்து 6 மாத காலத்திற்கு செயல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் கற்றல் இடைவெளியை குறைக்க இயலும் எனவும் , இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் மாலை 5 மணி முதல் 7 மணி வரை மாணவர்களை மையங்களுக்கு அனுப்ப வேண்டும் தெரிவித்தார்.

Next Post

சி.பி.எஸ்.இ. தேர்வு கால அட்டவணை வெளியீடா ? சி.பி.எஸ்.இ. விளக்கம்

Mon Oct 18 , 2021
சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என நிர்வாகம் அறிவித்தது. முதல் பகுதி தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், 2-வது பகுதி தேர்வு மார்ச்- ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஏற்ப பாடங்கள் பிரிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் முதல் பகுதி பொதுத் தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டதாக செய்தி வெளியானது. […]
CBSE-Public-Exam-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய