நவம்பர் 1-ம் தேதி மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறப்பு இல்லை – தமிழக அரசு..

தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளை தயார்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி மழலையர், நர்சரி பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறக்கப்படாது எனவும் தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மழலையர் எல்.கே.ஜி யூகேஜிக்கு பள்ளிகளை திறப்பு பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. அரசின் வழிகாட்டுதலின்படி முறையாக நெறிமுறைகளை கடைபிடித்து பள்ளிகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 16,326 பேருக்கு கொரோனா தொற்று..

Sat Oct 23 , 2021
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,326 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,41,59,562 ஆக உயர்ந்துள்ளது.இதில் அதிகபட்சமாக கேரளாவில் 9,361, மகாராஷ்டிராவில் 1,632, தமிழ்நாட்டில் 1,152 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 666 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் […]
covid-vaccination-for-people
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய